மூண்று ஆண்டுகள் தொடர் முயற்சியின் வெற்றியாக, காவனூர் VBO/VBT telescope center, ஜவ்வாது மலையில் உள்ள IIA இல் பார்த்தேன். மிக பிரம்மாண்டமானது. இரு கண்கலால் அதன் வடிவை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை. வாமன அவதாரம் தான். 2.34 மீட்டர் தடிமன் அளவு உள்ள லென்ஸ் கொண்டு, பால்வீதி முழுவதுமாய் அளக்க கூடிய திறன் கொண்டதாம். ஆசியா கண்டத்திலேயெ மிகப் பெரியது இது மட்டும் தானாம். இதனை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பிடிக்கின்றதாம்.
உள்ளே ஒரு தனி பெட்ரோல் பங்க்கே வைத்திருக்கிறார்கள். வண்டிகளுக்காக அல்ல, கரண்ட் இல்லாத சமயத்தை சமாலிக்க மட்டும். நான் எவ்வளவு சொன்னாளும் அதன் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் சொல்ல முடிய வில்லை.
நிலாவை ஒரு telescope இல் பார்க்க வைத்தார்கள், இண்டு, இடுக்கு, மேடு, பள்ளம், பாட்டி சுட்ட வடையின் எண்ணை கறை கூட பார்தேன்.
எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று. சந்தேகம் இல்லாமல் இது ஒரு மாகானூபாவம்.
நான் பார்த்த நாள்: 17 July 2010,
எல்லொரும் பார்க்க சனிகிழமை 2pm to 5pm மட்டும்.
Monday, July 19, 2010
Saturday, July 10, 2010
ஆசை.
நான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன். 60,70வதுகளில் வந்த அவரது படைப்புகளை, அப்போதய பதிப்புகளை மொத்தமும் ஒருவர் அக்கரையுடன் bind பண்ணி பாதுகாத்து பொக்கிஷமாய் வைத்திருந்தார். அவரிடம் இருந்து இரவல் வாங்கி மொத்தமும் படித்தேன். கிட்டத்தட்ட சிறுசும்(சிறுகதை), பெருசுமாய்(நாவல்) 47 புத்தககங்களை வாங்கி படித்தேன். படி தேன் குடித்தேன். அன்று முதல் அவருடன் இலக்கிய விவாதத்துடன் ஒரு வேளை உணவருந்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. படித்து முடித்ததும், ஒரு வருடம் கழித்து சேதாரம் இல்லாமல் 47 புத்தகங்களையும் பத்திரமாய் திருப்பிக்கொடுத்தேன். இப்பொழுது அவரது 90% படைப்புகளை வாசித்து முடிதிருப்பேன்.
அவருக்கு ஞானபீட விருது கிடைத்தபொழுது, வாழ்த்து சொல்ல விகடனிடம் அவரது முகவரியை வாங்கி, ஒரு கடிதமும் போட்டேன். அப்பொழுதும் எனது ஆசையை அவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். தமிழக முதல்வருடன் உணவருந்தவே அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!?!? அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஆசை, பேராசை என்றே எனக்கு படுகின்றது.
எழுத்தாளர் சுஜாதாவுடனும் இப்படி ஒரு சந்திப்பிற்காக காத்திருந்தேன். காலம் அந்த வாய்பை எனக்கு தாரவே இல்லை. :(
அவருக்கு ஞானபீட விருது கிடைத்தபொழுது, வாழ்த்து சொல்ல விகடனிடம் அவரது முகவரியை வாங்கி, ஒரு கடிதமும் போட்டேன். அப்பொழுதும் எனது ஆசையை அவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். தமிழக முதல்வருடன் உணவருந்தவே அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!?!? அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஆசை, பேராசை என்றே எனக்கு படுகின்றது.
எழுத்தாளர் சுஜாதாவுடனும் இப்படி ஒரு சந்திப்பிற்காக காத்திருந்தேன். காலம் அந்த வாய்பை எனக்கு தாரவே இல்லை. :(
Sunday, June 27, 2010
தேன் குரலாம்...
குரலும் இனிமை, குணாமும் இனிமை, குழைவும் இனிமை.. உங்கள் படாலை மட்டும் அல்ல, உங்களின் காதலையும், வாழ்வின் இனிமையையும் நேசிக்கின்றேன்.
வரம் தரும் சாமி போல, நீஙகள் தேன் குரல் தரும் சாமி. உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய பழைய ஆசை மேலும் புதுசாகின்றது.
மனதோடு மனோ. ஜெயா டிவியில் ஜானகி அம்மாவின் நிகழ்ச்சி(26 ஜுன் 2010) பார்த்தபின் தோண்றியது தான்.. மேலே உள்ள இரண்டு வரிகளும்.
வரம் தரும் சாமி போல, நீஙகள் தேன் குரல் தரும் சாமி. உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய பழைய ஆசை மேலும் புதுசாகின்றது.
மனதோடு மனோ. ஜெயா டிவியில் ஜானகி அம்மாவின் நிகழ்ச்சி(26 ஜுன் 2010) பார்த்தபின் தோண்றியது தான்.. மேலே உள்ள இரண்டு வரிகளும்.
Monday, June 21, 2010
ராவணன் Vs Manirathnam
ராவணன் எனக்குள்ளே புகுந்து, என்னுள் எந்த அளவுக்கு ராவண குணம் உள்ளது என யோசிக்க, கண்டுபுடிக்க, இந்த படம் ஒரு தூண்டுகோல்.
மனதுக்குள் ஒரு விஷயத்துகு ஆயிரம் கதவுகள் இருக்கின்றது, இதில் எந்த கதவு திறக்கின்றது என்பது தான் எதிர்பாராத திருப்பம்.
ஒரு dialoக் வரும் படத்தில், "கெட்டவங்களை கெட்டவங்களாகவே எனக்கு காட்டு" என ராகினி கடவுளிடம் கெஞ்சுவாள்.. அது போல எனக்கும் ராவணன் நலலவனாய் தெரிகின்றான்.
Sunday, June 13, 2010
பெங்களூர் தமிழ் சங்கம்.
நீண்ட நாளாக போகவேண்டும் என காத்திருந்து போய் பார்த்தேன்.மிக அழகான சூழலில், அல்சூர் ஏரிக்கரையில் உன்னதமான இட அமைப்பில் உள்ளது. மிக அதிகம் பேசப் பட்ட வள்ளுவர் சிலையாக, காத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றார்.
ஞாயிறு என்பதால், சங்கமும் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நான்கு மாடி கட்டிடமாக, தோரண வலைவுகளுடன் நான் தான் என்று உயர்ந்து நின்றகின்றது. நான் உள்ளே போன பொழுது, வென்கல வள்ளுவர் சிலை ஒன்றுடன், வாசன் வரைந்த 8 ஓவியங்களும் மட்டுமே இருந்தார்கள். இரண்டாவது மாடியில் நூலகம். புத்தகங்களை கணினிக்கு மாற்றும் பணி நடப்பதால், நூலக நேரஙகள் நிலையக இல்லை.
புத்தகங்கள், செம்மொழி என எதிர்பார்ப்புடன் போன எனக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான். 500 ரூ சந்தா தொகை, 3 புத்தகங்களுக்கு. செய்யாறில் 3, சென்னையில் 2 என லைப்ரரி கார்ட் வைத்திருக்கும் எனக்கு, இந்த 500 ரூ, கொஞ்சம் அதிகமாகவே பட்டது. மீண்டும் எப்பொழுது வரலாம் என கேட்ட பொழுது எனக்கு சரியான தகவல் கிடைக்க வில்லை. இன்டர்னேட், குறுஞ்செய்தி என தகவல் சொல்ல பல வழிகள் இருக்கின்ற பொழுதும், நேரில் வந்தாலும் தகவல் கிடைக்காதது..சங்கம் இன்னும் பல தளங்களை கடக்கவேண்டி உள்ளது.
வான் புகழ் வள்ளுவனும் எழுதாணியில் இருந்து, கீபோர்ட்கு தாவி விட்ட காலத்தில், பெங்களூர் தமிழ் சங்கம் இன்னமும் பனை ஓலை தேடிக் கொண்டிருகின்றது.
ஞாயிறு என்பதால், சங்கமும் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நான்கு மாடி கட்டிடமாக, தோரண வலைவுகளுடன் நான் தான் என்று உயர்ந்து நின்றகின்றது. நான் உள்ளே போன பொழுது, வென்கல வள்ளுவர் சிலை ஒன்றுடன், வாசன் வரைந்த 8 ஓவியங்களும் மட்டுமே இருந்தார்கள். இரண்டாவது மாடியில் நூலகம். புத்தகங்களை கணினிக்கு மாற்றும் பணி நடப்பதால், நூலக நேரஙகள் நிலையக இல்லை.
புத்தகங்கள், செம்மொழி என எதிர்பார்ப்புடன் போன எனக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான். 500 ரூ சந்தா தொகை, 3 புத்தகங்களுக்கு. செய்யாறில் 3, சென்னையில் 2 என லைப்ரரி கார்ட் வைத்திருக்கும் எனக்கு, இந்த 500 ரூ, கொஞ்சம் அதிகமாகவே பட்டது. மீண்டும் எப்பொழுது வரலாம் என கேட்ட பொழுது எனக்கு சரியான தகவல் கிடைக்க வில்லை. இன்டர்னேட், குறுஞ்செய்தி என தகவல் சொல்ல பல வழிகள் இருக்கின்ற பொழுதும், நேரில் வந்தாலும் தகவல் கிடைக்காதது..சங்கம் இன்னும் பல தளங்களை கடக்கவேண்டி உள்ளது.
வான் புகழ் வள்ளுவனும் எழுதாணியில் இருந்து, கீபோர்ட்கு தாவி விட்ட காலத்தில், பெங்களூர் தமிழ் சங்கம் இன்னமும் பனை ஓலை தேடிக் கொண்டிருகின்றது.
Sunday, May 9, 2010
என்னுடைய சவால்கள்
நான் கண்டுபுடித்த என்னுடைய சவால்கள்.
1. QTP கத்துகனும். மே மாதம் கடைசிக்குள்.
2. Onsite இன்னும் தொடாம இருக்கேன்.
3. தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் தெரியுது. மற்ற மொழிகள் தெரியாதது மிகப் பெரிய குறை. ஆங்கில புத்தகம் இன்னும் ஒண்ணுகூட படிக்கல, படிக்க முடியல, படிக்க தெரியல,படிச்சாலும் புரியல. வாங்கி வெச்ச ரெண்டு புக் படிக்கப் படமா ஷெல்புல தூங்கி கிட்டு இருக்கு. மிகப் பெரிய மனக்குறை இது.
4. மேளான்மையில் திறமை பத்தல.
...
...
...
1. QTP கத்துகனும். மே மாதம் கடைசிக்குள்.
2. Onsite இன்னும் தொடாம இருக்கேன்.
3. தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் தெரியுது. மற்ற மொழிகள் தெரியாதது மிகப் பெரிய குறை. ஆங்கில புத்தகம் இன்னும் ஒண்ணுகூட படிக்கல, படிக்க முடியல, படிக்க தெரியல,படிச்சாலும் புரியல. வாங்கி வெச்ச ரெண்டு புக் படிக்கப் படமா ஷெல்புல தூங்கி கிட்டு இருக்கு. மிகப் பெரிய மனக்குறை இது.
4. மேளான்மையில் திறமை பத்தல.
...
...
...
Friday, May 7, 2010
பொன்விலங்கு
பொன்விலங்கு
சமிபத்தில் படித்த, ருசித்த நாவல். நான் படித்த முதல் நா.பார்த்தசாரதியின் கதை.
மிக நல்ல புத்தகம் என்பதல், தேடல் உள்ளவர்களுக்கு இதனை சிபாரிசு செய்கின்றேன்.
நேரம் போதாததால், சிபாரிசு மட்டும் இங்கே.
சமிபத்தில் படித்த, ருசித்த நாவல். நான் படித்த முதல் நா.பார்த்தசாரதியின் கதை.
மிக நல்ல புத்தகம் என்பதல், தேடல் உள்ளவர்களுக்கு இதனை சிபாரிசு செய்கின்றேன்.
நேரம் போதாததால், சிபாரிசு மட்டும் இங்கே.
Tuesday, March 30, 2010
மஹாத்மா
முடிக்க வேண்டும் என்று துவக்கப் பட்ட எல்லா வேலைகலும் முடிவுக் கோட்டை தொடுவது இல்லை. எத்தனையொ புத்தகங்களை பத்து பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் திண்டாடிகொண்டுதான் இருக்கின்றேன். அப்படி பல தடைகளை தாண்டி மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை'(தமிழ்) முடித்தேன்.
ஒரு புத்தகம் தனக்கு தேவையான வாசகனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? எல்லா புத்தகங்களும் கையில கிடைத்தால் மட்டும் படிக்கப் பட்டு விடுவது இல்லை. புத்தகத்துக்கும் வாசகனுக்கும் ஒரு நதி மூலம் ரிஷி மூலமே எப்பொழுதும் இருந்து கொண்டு வருகின்றது.
எத்தனை மலிவாய் கிடத்தாளும், படிக்க வேண்டும் என்ற விதை, அவா, தாகம் எங்கோ ஒரு புள்ளியில் தான் ஊண்றப் படுகின்றது. பூபாலின்(வி/கடலை பருவத்து தோழன்) அண்ணா தான் முதன் புள்ளி. இரண்டாவது, சுந்தர்.சி விவேக் நடித்த ஒரு படம். படத்தில் இருவரும் தண்டனைக்காக மதுரை காந்தி மியுசியம் வருவார்கள். ஒரு போட்டிக்காக சத்திய சோதனை புக்கை மாளவிகா பெயரை பயன் படுத்தி அதிகம் விற்பார்கள். அந்த புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களில் ஒருவர் மாளவிகா உடன் டிண்ணர் சாப்பிட வாய்ப்பு. போட்டிக்காக புத்தகத்தை வாசிக்கும் ஒரு ரசிகர், சத்திய சோதனையால் கவரப்பட்டு, திருந்தி மக்களுக்கு சேவை செய்ய கிளம்பி விடுவார். இந்த காட்சியினால் இந்த புக்ககை படிக்க ஆசை பட்டேன். இந்த காட்சியினால் தூண்டப் பட்டு யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி இருப்பார்கலா? தெரியவில்லை?! இது படத்தின் டைரக்டருக்கு கிடைத்த வெற்றியே!!
மொத்தம் 605 பக்கங்கள். வாசிக்க வாசிக்க மஹாத்மாவை பக்கத்தில் இருந்து பார்த்தார் போல் இருக்கின்றது. எந்த ஊடகமும் கொடுக்க முடியாத ஒரு நெருக்கத்தை புத்தகம் மட்டுமே கொடுக்கின்றது. சத்திய சோதனை இந்த வார்த்தையின் பொருள் படிப்பதற்க்கு முன் ஒன்றாகவும், ப.பின் வேறாகவும் உணர முடிகின்றது. தாம் எடுத்துக் கொண்ட சத்தியத்திற்கு எத்தகய சோதனைகள் வந்தன, அதை எந்த எந்த நேரத்தில் எப்படி காப்பாறப்பட்டது என்பதன் அவதனிப்பே இந்த புத்தகம்.இதில் அவரே நம்முடன் பேசுவது போல் புத்தகம் துடங்குகின்றது. நம் வீட்டு தாத்தா அவர் வாழ்ந்த வாழ்கையை அவரே கதை கதையாய் நம்மிடம் சொல்வது போல் காந்தி நம்மிடம் சொல்கின்றார்.
அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு இது விவரிக்கப் படுகின்றது. சாதாரன பைய்யனாய் எப்படி ஒருவன் வளர்கின்றான், என்ன என்ன காரணங்கள் ஒருவனின் வாழ்கையில் குறுக்கிடுகின்றன, எப்படி அவன் அதை பயன் படுத்திக்கொள்கின்றான் என புத்தகம் விரிகின்ற பக்கங்கள் ஒவ்வொன்ரும் மிக எதார்தமானவை.
நமது அன்றாட வாழ்வில் மஹாத்மா, பல வழிகளில் நம்மை குறுக்கிடுகின்றார். கரண்சி நோட்டில், காந்தி கணக்கில், திரைப்பட நீதி மன்ற, போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், வழுக்கை தலையுடன், வட்ட கண்ணாடி அனிந்த தாத்தா உருவம், நாம் கண் மூடி யோசித்தாலும் நம்மால் காண முடியும்.
எப்படி இவர் மட்டும் இந்த இடத்திற்கு வர முடிந்தது, 40 கோடி மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தலைவன் எப்படி உருவானான். எல்லா காலத்திற்குமான ஒரு பாடம் தான் இந்த சத்திய சோதனை.
அவர், தேசப் பிதாவாக மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு பிழையே. பால்யத்தில் அவர் கொண்ட லீலைகள், பாரிஸ்டர் பட்டப் படிப்பு வாழ்கை, இங்கிலாந்து வாழ்கை, அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பக்க விளைவுகள், தென் ஆப்ரிக்கா பயணம், அங்கு அவர் செய்த வக்கில் தொழில், கப்பல் பயணக் குறிப்புகள், மூண்றாம் வகுப்பு இரயில் பயண சங்கடங்கள், சைவ உணவு போறாட்டம், ஆட்டுப் பால் பழக்கம், எப்படி பிரச்சனைகளை அனுகுவது, எப்படி தலைவனுக்கான குணங்களை பெருவது, என எல்லா பக்கங்களிலும் ஒரு M.B.A மாணவனுக்கு தேவையான பாடங்களும்,அனுபவங்களும் மிகப் பெரிய வரம்.
இந்த புத்தகத்தை சரியாக marketing செய்ய தவறி விட்டார்கள் நமது பெருசுகள். எத்தனை கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் இந்த புத்தகதை முழுவதுமாய் படித்து இருக்கின்றார்கள்?? ஒரு ஆசிரியர் படித்தால், அவரால் ஒரு நூறு பேரை படிக்க வைக்க முடியும். இங்கு பிரச்சனையெ ஆசிரியரை படிக்க வைப்பது தான்...
இந்த புத்தகம், எந்த ஒரு விருவிருப்பான துப்பரியும் கதைக்கும் சலைத்தது அல்ல.
நேரம் இல்லை என்று பந்தா பன்னும் பலப் பேருக்கு இந்த புத்தகம் ஒரு ஆயுலுக்கு தேவையான நேரத்தை காலத்துகும் வாங்கிக் கொடுக்கும்.
ஜன கன மன பாடுவது மட்டும் தேசப் பற்று ஆகிவிடாது. மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவனை, முதல்வனை,ஒரு அசாதாரண மனிதரை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு, மற்றவர்களை படிக்கத் தூண்டுவதும் தேசப் பக்தியே.
நொபல் விஞ்சானி ஐன்ஸ்டின் சொன்னாராம்," 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மனிதர் நம்மிடயே வாழ்ந்தார் என்றால், இந்த உலகம் நம்பாது" என்று. உண்மை தான், என்னால் உணர முடிகின்றது.
பாரத் மாதக்கு ஜெய்....மஹாத்மா காந்திக்கு ஜெய்!!
ஒரு புத்தகம் தனக்கு தேவையான வாசகனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? எல்லா புத்தகங்களும் கையில கிடைத்தால் மட்டும் படிக்கப் பட்டு விடுவது இல்லை. புத்தகத்துக்கும் வாசகனுக்கும் ஒரு நதி மூலம் ரிஷி மூலமே எப்பொழுதும் இருந்து கொண்டு வருகின்றது.
எத்தனை மலிவாய் கிடத்தாளும், படிக்க வேண்டும் என்ற விதை, அவா, தாகம் எங்கோ ஒரு புள்ளியில் தான் ஊண்றப் படுகின்றது. பூபாலின்(வி/கடலை பருவத்து தோழன்) அண்ணா தான் முதன் புள்ளி. இரண்டாவது, சுந்தர்.சி விவேக் நடித்த ஒரு படம். படத்தில் இருவரும் தண்டனைக்காக மதுரை காந்தி மியுசியம் வருவார்கள். ஒரு போட்டிக்காக சத்திய சோதனை புக்கை மாளவிகா பெயரை பயன் படுத்தி அதிகம் விற்பார்கள். அந்த புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களில் ஒருவர் மாளவிகா உடன் டிண்ணர் சாப்பிட வாய்ப்பு. போட்டிக்காக புத்தகத்தை வாசிக்கும் ஒரு ரசிகர், சத்திய சோதனையால் கவரப்பட்டு, திருந்தி மக்களுக்கு சேவை செய்ய கிளம்பி விடுவார். இந்த காட்சியினால் இந்த புக்ககை படிக்க ஆசை பட்டேன். இந்த காட்சியினால் தூண்டப் பட்டு யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி இருப்பார்கலா? தெரியவில்லை?! இது படத்தின் டைரக்டருக்கு கிடைத்த வெற்றியே!!
மொத்தம் 605 பக்கங்கள். வாசிக்க வாசிக்க மஹாத்மாவை பக்கத்தில் இருந்து பார்த்தார் போல் இருக்கின்றது. எந்த ஊடகமும் கொடுக்க முடியாத ஒரு நெருக்கத்தை புத்தகம் மட்டுமே கொடுக்கின்றது. சத்திய சோதனை இந்த வார்த்தையின் பொருள் படிப்பதற்க்கு முன் ஒன்றாகவும், ப.பின் வேறாகவும் உணர முடிகின்றது. தாம் எடுத்துக் கொண்ட சத்தியத்திற்கு எத்தகய சோதனைகள் வந்தன, அதை எந்த எந்த நேரத்தில் எப்படி காப்பாறப்பட்டது என்பதன் அவதனிப்பே இந்த புத்தகம்.இதில் அவரே நம்முடன் பேசுவது போல் புத்தகம் துடங்குகின்றது. நம் வீட்டு தாத்தா அவர் வாழ்ந்த வாழ்கையை அவரே கதை கதையாய் நம்மிடம் சொல்வது போல் காந்தி நம்மிடம் சொல்கின்றார்.
அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு இது விவரிக்கப் படுகின்றது. சாதாரன பைய்யனாய் எப்படி ஒருவன் வளர்கின்றான், என்ன என்ன காரணங்கள் ஒருவனின் வாழ்கையில் குறுக்கிடுகின்றன, எப்படி அவன் அதை பயன் படுத்திக்கொள்கின்றான் என புத்தகம் விரிகின்ற பக்கங்கள் ஒவ்வொன்ரும் மிக எதார்தமானவை.
நமது அன்றாட வாழ்வில் மஹாத்மா, பல வழிகளில் நம்மை குறுக்கிடுகின்றார். கரண்சி நோட்டில், காந்தி கணக்கில், திரைப்பட நீதி மன்ற, போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், வழுக்கை தலையுடன், வட்ட கண்ணாடி அனிந்த தாத்தா உருவம், நாம் கண் மூடி யோசித்தாலும் நம்மால் காண முடியும்.
எப்படி இவர் மட்டும் இந்த இடத்திற்கு வர முடிந்தது, 40 கோடி மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தலைவன் எப்படி உருவானான். எல்லா காலத்திற்குமான ஒரு பாடம் தான் இந்த சத்திய சோதனை.
அவர், தேசப் பிதாவாக மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு பிழையே. பால்யத்தில் அவர் கொண்ட லீலைகள், பாரிஸ்டர் பட்டப் படிப்பு வாழ்கை, இங்கிலாந்து வாழ்கை, அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பக்க விளைவுகள், தென் ஆப்ரிக்கா பயணம், அங்கு அவர் செய்த வக்கில் தொழில், கப்பல் பயணக் குறிப்புகள், மூண்றாம் வகுப்பு இரயில் பயண சங்கடங்கள், சைவ உணவு போறாட்டம், ஆட்டுப் பால் பழக்கம், எப்படி பிரச்சனைகளை அனுகுவது, எப்படி தலைவனுக்கான குணங்களை பெருவது, என எல்லா பக்கங்களிலும் ஒரு M.B.A மாணவனுக்கு தேவையான பாடங்களும்,அனுபவங்களும் மிகப் பெரிய வரம்.
இந்த புத்தகத்தை சரியாக marketing செய்ய தவறி விட்டார்கள் நமது பெருசுகள். எத்தனை கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் இந்த புத்தகதை முழுவதுமாய் படித்து இருக்கின்றார்கள்?? ஒரு ஆசிரியர் படித்தால், அவரால் ஒரு நூறு பேரை படிக்க வைக்க முடியும். இங்கு பிரச்சனையெ ஆசிரியரை படிக்க வைப்பது தான்...
இந்த புத்தகம், எந்த ஒரு விருவிருப்பான துப்பரியும் கதைக்கும் சலைத்தது அல்ல.
நேரம் இல்லை என்று பந்தா பன்னும் பலப் பேருக்கு இந்த புத்தகம் ஒரு ஆயுலுக்கு தேவையான நேரத்தை காலத்துகும் வாங்கிக் கொடுக்கும்.
ஜன கன மன பாடுவது மட்டும் தேசப் பற்று ஆகிவிடாது. மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவனை, முதல்வனை,ஒரு அசாதாரண மனிதரை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு, மற்றவர்களை படிக்கத் தூண்டுவதும் தேசப் பக்தியே.
நொபல் விஞ்சானி ஐன்ஸ்டின் சொன்னாராம்," 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மனிதர் நம்மிடயே வாழ்ந்தார் என்றால், இந்த உலகம் நம்பாது" என்று. உண்மை தான், என்னால் உணர முடிகின்றது.
பாரத் மாதக்கு ஜெய்....மஹாத்மா காந்திக்கு ஜெய்!!
Monday, March 29, 2010
பட்டய கிளப்புற பட்டம்..
சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாமல் நமக்குள் எத்தனை நாள் புதைந்து இருந்தாலும், ஒரு நாள் நிறைவேற வாய்ப்பு கிடக்கும் பொழுது பெறுகின்ற மகிழ்சிக்கு ஈடு இணை ஏது? வயசு வித்யாசம் ஏது..? அப்படியான சி.சி.ஆ ஒன்று நேற்று வயசுக்கு வந்தது.
கோலி ஆடுதல், சுற்றும் பம்பரத்தை கையில் ஏற்றி விரும்பிய பெண்ணின் கையில் விட்டு கிச்சு-கிச்சு மூட்டுதல், மாஞ்ச நூலுடன் பட்டம் விடுதல், விரல் மடித்து விசில் அடித்தல்.. இப்படி சி.சி.ஆசைகளில் சின்ன வயசு முதற்கொண்டே தோற்றவனாகவே இருந்தது வந்து இருகின்றேன்.
கோலி ஆடுதல், சுற்றும் பம்பரத்தை கையில் ஏற்றி விரும்பிய பெண்ணின் கையில் விட்டு கிச்சு-கிச்சு மூட்டுதல், மாஞ்ச நூலுடன் பட்டம் விடுதல், விரல் மடித்து விசில் அடித்தல்.. இப்படி சி.சி.ஆசைகளில் சின்ன வயசு முதற்கொண்டே தோற்றவனாகவே இருந்தது வந்து இருகின்றேன்.
நேற்று அக்கா பையனுடன் பட்டம் விட்டேன்... என்ன ஒரு ஆச்சரியம். சின்ன வயசில் ஆட்டம் காட்டிய பட்டம் நேற்று கைவசம் சிக்கியது... மேலே மேலே மேலே என்று பட்டம் பறந்த பொழுது, நானும் கூடவே பறந்தேன். Aerodynamics இல் பட்டம் வாங்கியது போல இருந்தது.. மாஞ்ச தடவிய நூலில் பட்டம் மேலே போக போக நானும் அக்கா பையனும் கூத்தாடினோம். காற்று திசை மாறி கீழ் நோக்கி பாய்ந்த பொழுது திக் திக் எகிறியது.. சின்ன வயசில் சிக்காத நுணுக்கம் நேற்று சிக்கியது. பட்டம் கிழே பாயும் பொழுது சர சர என நூலை இழுத்து, சொடுக்கி சொடுக்கி பட்டதை அந்தரத்தில் நிறுத்துவது தனி கலை. தலையில் கொம்பு(unicorn) முலைதார் போல் இருந்தது. சிறு வயதில் பட்டதை விண்ணில் நிறுத்துவதற்கும், பெரியவர்கள் ஆனா பின்னர் satellite யை வானில் நிறுத்துவதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது போல...
என் ஜோட்டு பசங்க எல்லோரும் அப்பவே மிக சரியாய் பட்டத்தை வானில் நிறுத்தி விண்ணை தாண்டி இருகிறார்கள். சில பேர் பட்டறிவில் மிக தேர்ந்தவராக வளர்கின்றார்கள். இதில் நான் கொஞ்சம் மக்கு ரகம்.
மரம் ஏற, கில்லி ஆட, கோழி புடிக்க, மாங்காய் திருட, பால்(ball) திருட, இதில் எல்லாம் ஜஸ்ட் பாஸ் ரகம் தான்.
பெண்கள் ஏன் பட்டம் விடுவது இல்லை? இதையும் indoor game ல் சேர்த்தால் பெண்களும் பட்டம் விட கூடும்.. மூன்று மணிநேரம் உலகை மறந்து வானில் கண்கள் பதிய பட்டத்தை மிதக்க வைப்பது ஒரு சுகானுபவமே....
சந்திரமுகி ரஜினி போல, நானும் பட்டய கிளப்புற பட்டத்தை பறக்கவிட்டேன்.
பட்டம் விடாமல், பட்டம்(degree) வாங்கி என்ன பயன்...??
சந்திரமுகி ரஜினி போல, நானும் பட்டய கிளப்புற பட்டத்தை பறக்கவிட்டேன்.
Wednesday, March 10, 2010
கொக்கு பற பற! மைனா பற பற!!
எத்தனை முறை படித்திருப்போம்? எத்தனை முறை வாய் வார்த்தையை சொல்லி இருப்போம்? ஒரு முறையேனும் பறந்து இருப்போமா? ஒற்றை வார்த்தையில் பறக்க வேண்டுமா வாருங்கள் வேடந்தாங்கல்.
போன வாரம், பறவையோடு பறவையாய் ஒரு முழு நாள் மொத்தமும் பறந்து திரிந்து வந்தேன். பாட புத்தகத்தில் எல்லாம் சென்னை இல் இருபதாகவே சொல்லி வருகின்றார்கள். மதுராந்தகதுகும் செங்கல்பட்டுக்கும் நடுவில் உள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஏரி தான் வேடந்தாங்கல். இனிப்பு என்பதர்ற்கு அர்த்தத்தை dictionary இல் தேடும் பொழுது, திருப்தி லட்டு கிடைப்பதை போல வேடந்தாங்கல் எனக்கும் அறிமுகம் ஆனது. Cousin Bro தான் இந்த ஊர் சுத்துற விஷயத்துக்கு partner.
நாம் ஏன் பறவைகளை விட்டு பிரிந்து இருக்கின்றோம்? எப்பொழுது பறவைகளை விட்டு பிரிந்தோம்? நமது பக்கத்து விட்டு மனிதர்களை பங்காளியாய் நினைக்கின்ற உறவை, பறவைகளிடமும், விலான்குகளிடமும் நாம் உணர்வது இல்லையே ஏன்? காகம், புற, மைனா என நாம் தெரிந்து வைத்து இருக்கும் பறவைகள் மிக சொற்பமே.
வேடந்தாங்கலில் பறவைகள் வருஷ வருஷம் அட்ரஸ் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.. எத்தனை எத்தனை பறவைகள்!! நான் பார்த்த பொழுது கிட்ட தட்ட 50 ஆயிரம் பறவைகள் இருந்து இருக்கும். சைபிரிய, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வட துருவம் என கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த பறவைகளை பார்த்தேன். ஒரு மரத்தில் ஒரு இன பறவைகள் என கூடம் கூடமாக military dicipline வாழ்க்கை வாழ்கின்றன.
ஜோடி பறவைகளாய் தங்கள் இனத்தை பெருக்கி கொள்வதற்காவே வேடந்தாங்கல் வருகின்றன. Vedanthaaingal பற்றி நமக்கும் புரியாத ஏதோ ஒரு விஷேசத்தை அந்த பறவைகள் மட்டும் தேரிந்து வைத்து இருகின்றன. எனக்கு புரியவே இல்ல, எப்படி இந்த இடத்தை பறவைகள் கண்டுபிடித்தன என்று? எப்படி தான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும் என்று அலைகின்றானோ?
தாய் பறவை அங்கும் இங்கும் பறந்து, சுள்ளி பொறுக்கி சொந்தமாய் கூடு காட்டுகின்றது. ஆண் பறவை இரை தேடி 100km வரை பறந்து திரிகின்றது. Watch tower ஒன்று வைத்து இருக்கின்றார்கள். Telescope ஒன்றின் மூலம் தூரத்தில் இருக்கும் பறவை கூடு, கூட்டில் இருக்கும் பறவை, பறவையின் முட்டை, குஞ்சு பொரிந்த குட்டி சேய் பறவை என, மிக பக்கத்தில் காட்டுகிறார்கள். அந்த பறவை குட்டுகுள் நானும் ஒரு பறவை குஞ்சாய் உணர்ந்தேன்.
அவை பறக்கும் அழகு, கூடு கட்டும் அழகு, முட்டைகளுக்கு வெயில் படாமல் இருக்க இரண்டு இறக்கை களையும் விரித்து பகிரதன் போல மௌனமாய் நின்று அடை காக்கும் அழகு, run way இல் இறங்கும் விமானம் போல மாலை கூடு திரும்பும் பறவைகள், அங்கிங் என காணும் காட்சி மொத்தமும் பறக்கும் ஓவியங்களே!!! Jan to April நான்கு மாதங்களே வந்து, குட்டி ஈன்று, குட்டி பறவைகளுக்கு வழி காட்டி, மீண்டும் தன் வசிப்பிடதுக்கே திரும்புகின்றன. குட்டி பறவைகள் தன் பருவ காலத்தில் வழி தப்பாமல் மீண்டும் தான் பிறந்த எட்டத்துகே வருகின்றன. இரவு படுத்த பின்னும் பறவைகள் கண்ணுக்குள் பறந்து கொண்டே இருந்தன. அவதார் படத்தில் ஹீரோ பறவை மேல் உட்கார்ந்து பறப்பது போலவே இருந்தது.
எனது அண்ணாவின் வர்ப்புருதலால் ஒரு வெளிநாட்டினரிடம் பேச்சு கொடுத்தேன்...
" ஹலோ, Weclome டு இந்திய. எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி. எந்த தேசத்தை சார்ந்தவர் நீங்கள்?"
"hey nice to meet you, we are from England"
" oh nice, hope this is your fist visit to India and Vedathaaingal? how is your trip?"
"NO! NO! this is my second visit to Vedanthaaingal and India"
வெட்கத்தால் என் தலையை மண்ணுக்கும் புதைத்துக்கொண்டு இருப்பேன் நான் மட்டும் நெருப்பு கோழியாய் இருந்திருந்தால்... ஏன் என்றால் என் ஊர் செய்யாரில் இருந்து வேடந்த்தாங்கள் 40km தூரம் கூட இருக்காது.. இத்தனை வருஷத்தில் முதல் தடவையாய் இப்பொழுது தான் வருகின்றேன்.
கோயில் குளம் என்று சலிக்காமல் சுற்றும் நாம், ஒரு முறையேனும் நம் குழதைகளோடு இங்கு வந்து பார்க்க வைக்க வேண்டாமா ? குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுத்தால் மட்டும் போதுமா, பறக்க சொல்லி கொடுக்க வேண்டாமா?
போன வாரம், பறவையோடு பறவையாய் ஒரு முழு நாள் மொத்தமும் பறந்து திரிந்து வந்தேன். பாட புத்தகத்தில் எல்லாம் சென்னை இல் இருபதாகவே சொல்லி வருகின்றார்கள். மதுராந்தகதுகும் செங்கல்பட்டுக்கும் நடுவில் உள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஏரி தான் வேடந்தாங்கல். இனிப்பு என்பதர்ற்கு அர்த்தத்தை dictionary இல் தேடும் பொழுது, திருப்தி லட்டு கிடைப்பதை போல வேடந்தாங்கல் எனக்கும் அறிமுகம் ஆனது. Cousin Bro தான் இந்த ஊர் சுத்துற விஷயத்துக்கு partner.
நாம் ஏன் பறவைகளை விட்டு பிரிந்து இருக்கின்றோம்? எப்பொழுது பறவைகளை விட்டு பிரிந்தோம்? நமது பக்கத்து விட்டு மனிதர்களை பங்காளியாய் நினைக்கின்ற உறவை, பறவைகளிடமும், விலான்குகளிடமும் நாம் உணர்வது இல்லையே ஏன்? காகம், புற, மைனா என நாம் தெரிந்து வைத்து இருக்கும் பறவைகள் மிக சொற்பமே.
வேடந்தாங்கலில் பறவைகள் வருஷ வருஷம் அட்ரஸ் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.. எத்தனை எத்தனை பறவைகள்!! நான் பார்த்த பொழுது கிட்ட தட்ட 50 ஆயிரம் பறவைகள் இருந்து இருக்கும். சைபிரிய, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வட துருவம் என கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த பறவைகளை பார்த்தேன். ஒரு மரத்தில் ஒரு இன பறவைகள் என கூடம் கூடமாக military dicipline வாழ்க்கை வாழ்கின்றன.
ஜோடி பறவைகளாய் தங்கள் இனத்தை பெருக்கி கொள்வதற்காவே வேடந்தாங்கல் வருகின்றன. Vedanthaaingal பற்றி நமக்கும் புரியாத ஏதோ ஒரு விஷேசத்தை அந்த பறவைகள் மட்டும் தேரிந்து வைத்து இருகின்றன. எனக்கு புரியவே இல்ல, எப்படி இந்த இடத்தை பறவைகள் கண்டுபிடித்தன என்று? எப்படி தான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும் என்று அலைகின்றானோ?
தாய் பறவை அங்கும் இங்கும் பறந்து, சுள்ளி பொறுக்கி சொந்தமாய் கூடு காட்டுகின்றது. ஆண் பறவை இரை தேடி 100km வரை பறந்து திரிகின்றது. Watch tower ஒன்று வைத்து இருக்கின்றார்கள். Telescope ஒன்றின் மூலம் தூரத்தில் இருக்கும் பறவை கூடு, கூட்டில் இருக்கும் பறவை, பறவையின் முட்டை, குஞ்சு பொரிந்த குட்டி சேய் பறவை என, மிக பக்கத்தில் காட்டுகிறார்கள். அந்த பறவை குட்டுகுள் நானும் ஒரு பறவை குஞ்சாய் உணர்ந்தேன்.
அவை பறக்கும் அழகு, கூடு கட்டும் அழகு, முட்டைகளுக்கு வெயில் படாமல் இருக்க இரண்டு இறக்கை களையும் விரித்து பகிரதன் போல மௌனமாய் நின்று அடை காக்கும் அழகு, run way இல் இறங்கும் விமானம் போல மாலை கூடு திரும்பும் பறவைகள், அங்கிங் என காணும் காட்சி மொத்தமும் பறக்கும் ஓவியங்களே!!! Jan to April நான்கு மாதங்களே வந்து, குட்டி ஈன்று, குட்டி பறவைகளுக்கு வழி காட்டி, மீண்டும் தன் வசிப்பிடதுக்கே திரும்புகின்றன. குட்டி பறவைகள் தன் பருவ காலத்தில் வழி தப்பாமல் மீண்டும் தான் பிறந்த எட்டத்துகே வருகின்றன. இரவு படுத்த பின்னும் பறவைகள் கண்ணுக்குள் பறந்து கொண்டே இருந்தன. அவதார் படத்தில் ஹீரோ பறவை மேல் உட்கார்ந்து பறப்பது போலவே இருந்தது.
எனது அண்ணாவின் வர்ப்புருதலால் ஒரு வெளிநாட்டினரிடம் பேச்சு கொடுத்தேன்...
" ஹலோ, Weclome டு இந்திய. எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி. எந்த தேசத்தை சார்ந்தவர் நீங்கள்?"
"hey nice to meet you, we are from England"
" oh nice, hope this is your fist visit to India and Vedathaaingal? how is your trip?"
"NO! NO! this is my second visit to Vedanthaaingal and India"
வெட்கத்தால் என் தலையை மண்ணுக்கும் புதைத்துக்கொண்டு இருப்பேன் நான் மட்டும் நெருப்பு கோழியாய் இருந்திருந்தால்... ஏன் என்றால் என் ஊர் செய்யாரில் இருந்து வேடந்த்தாங்கள் 40km தூரம் கூட இருக்காது.. இத்தனை வருஷத்தில் முதல் தடவையாய் இப்பொழுது தான் வருகின்றேன்.
கோயில் குளம் என்று சலிக்காமல் சுற்றும் நாம், ஒரு முறையேனும் நம் குழதைகளோடு இங்கு வந்து பார்க்க வைக்க வேண்டாமா ? குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுத்தால் மட்டும் போதுமா, பறக்க சொல்லி கொடுக்க வேண்டாமா?
Thursday, January 28, 2010
"ஆய பயன் "
மனித கரு உருவானது முதல் படிப் படியாக எப்படி மனம் வளர்கிறது என்பதை விளக்குவதே Freud ன் முதல் வேலை.
துணையா யாரவது படிச்சிட்டு வாங்கபா, இன்னும் deep ஆ discuss பண்ணலாம். சொல்ல வேண்டியதுலாம் இன்னும் நிறைய baakki இருக்கேனு ...மனசு புலம்புகின்றது.
Wednesday, January 27, 2010
பாதி கிணறு
Sigmund Freud யை பாதி கிணறு தாண்டி விட்டேன்.. Wow Wow Wow...!! ஏன் இந்த புத்தகம் உலகை புரட்டி போட்டது எப்பது புரிகின்றது.
நான் படிக்க பயந்தது போல் எதுவும் என்னை மிரட்ட வில்லை.
அக்கு வேறு, ஆணி வேறாக இந்த புத்தகம் மனிதனை பிரித்து போட்டு விடுகின்றது..
மனித மனம் எப்படி வளர்கின்றது, எப்படி பாதிக்கப் படுகின்றது, எது மனம் வளர பக்க துணை நிற்கிறது, மனதின் வளர் நிலை, குழந்தை மனம், வாலிபமனம், ஆண் மனம், பெண் மனம், சமுதாய மனம், உள் மனம், வெளி மனம், எப்படி காதல், பல பேர் இறுக்க ஒருத்தர் மீது மட்டும் ஏன் காதல், நீ படிக்கும் பாடம் , பிடிக்கும் பிடி, செய்யும் தொழில், ஏன் பிடிகிறது, ஏன் காரம் பிடிக்கவில்லை, பால் வேறுபாடு, ஆண் ஏன் காதலிக்கிறான், பெண் ஏன் காதலிக்கப் பட விரும்புகிறாள், ஏன் கனவு, ஏன் மனசிதைவு, ஏன் mackup ,நட்பு எப்படி காதலாக மாறுகின்றது, பெண் ஏன் pant shirt விரும்புகிறாள், ஏன் homo, பலப் பல "ஏன்" களுக்கு இந்த புத்தகம் மிக theylivaaga விளக்கம் தருகிறது. பல விஷயங்களை சவுக்கால் அடிப்பது போல் "சுரீர்" என விழுகின்றது. அதனால் தானோ மிக அதிகமான எதிரிப்பை இந்த புத்தகம் சந்தித்து?!நான் படிக்க பயந்தது போல் எதுவும் என்னை மிரட்ட வில்லை.
அக்கு வேறு, ஆணி வேறாக இந்த புத்தகம் மனிதனை பிரித்து போட்டு விடுகின்றது..
Freud காக என் தலை தொப்பியை தூக்குகின்றேன்.
( மீதி... முழுவதும் படித்த பின்)
Monday, January 11, 2010
சென்னை புத்தக திருவிழா. 33 ம் ஆண்டு.
கண் கொள்ள காட்சி. நான் காத்திருந்து வாங்கிய புத்தகங்கள்.
1. Sigmund Freud ன், Psychoanalysis science உளப்பகுபாய்வு அறிவியல்.(தமிழ்)2 எழுதும் வாழ்கையும் -சுஜாதா
3 . ............... காதலன் - சுஜாதா(கண்ணை மூடிக்கொண்டு, சுஜாதா என்பதால் வாங்கிய புத்தகம், டைட்டில் நினைவிற்கு வர மறுக்கின்றது)
4 . வெல்லைத்தீ- அறிவுமதி
5 . அம்மா வந்தாள். தி.ஜா
6 அடி . தி.ஜா
8 . பிராணயாமம் -
9 UGC for akka
10. power grid for babuji.
படித்த பின், பிடித்தவை உங்கள் முன்.
Tuesday, January 5, 2010
சமையல் அறை சண்டை
15:20 05/01/2010
சமையல் அறை சண்டை
------------------
அறை எண் 305 ல்
முகம் பார்த்திராத
நண்பர்களின் அம்மாக்கள்
கையளவு ப்பிளஸ்டிக் டப்பாவுகுள்
சமையல் அறையில்
சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்,
'யார் செய்து கொடுத்த
ஊறுகாய் அதிக சுவை' என்று.
_ லெள ஆல் கார்'தீ'க், செய்யாறு.
சமையல் அறை சண்டை
------------------
அறை எண் 305 ல்
முகம் பார்த்திராத
நண்பர்களின் அம்மாக்கள்
கையளவு ப்பிளஸ்டிக் டப்பாவுகுள்
சமையல் அறையில்
சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்,
'யார் செய்து கொடுத்த
ஊறுகாய் அதிக சுவை' என்று.
_ லெள ஆல் கார்'தீ'க், செய்யாறு.
Subscribe to:
Posts (Atom)