Friday, February 3, 2012

இறகு விடு தூது.

வெள்ளையும் சாம்பலும் கலந்த,
ஆணும் பெண்ணும் மகிழ்ந்து குளாவிய சீண்டலில்
புறாவின் சிறகு ஒன்று உதிர்ந்து
பஞ்சுப்பொதி போன்று,
காற்றில் மிதந்து,
வளைந்து, நெளிந்து,
சுழன்று, தவழ்ந்து,
புவி ஈர்ப்பு விசை மீறி,
ஆடி ஆடி, தரை தொடுகையில்
காதல் கவிதை ஒன்று காற்றிற்கு சொந்தமானது.