Tuesday, March 30, 2010

ம‌ஹாத்மா

முடிக்க வேண்டும் என்று துவக்கப் பட்ட எல்லா வேலைகலும் முடிவுக் கோட்டை தொடுவது இல்லை. எத்தனையொ புத்தகங்களை பத்து பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் திண்டாடிகொண்டுதான் இருக்கின்றேன். அப்படி பல தடைகளை தாண்டி மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை'(தமிழ்) முடித்தேன்.

ஒரு புத்தகம் தனக்கு தேவையான வாசகனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? எல்லா புத்தகங்களும் கையில கிடைத்தால் மட்டும் படிக்கப் பட்டு விடுவது இல்லை. புத்தகத்துக்கும் வாசகனுக்கும் ஒரு நதி மூலம் ரிஷி மூலமே எப்பொழுதும் இருந்து கொண்டு வ‌ருகின்ற‌து.

எத்தனை மலிவாய் கிடத்தாளும், படிக்க வேண்டும் என்ற விதை, அவா, தாகம் எங்கோ ஒரு புள்ளியில் தான் ஊண்றப் படுகின்றது. பூபாலின்(வி/க‌ட‌லை ப‌ருவ‌த்து தோழன்) அண்ணா தான் முதன் புள்ளி. இரண்டாவது, சுந்தர்.சி விவேக் நடித்த ஒரு படம். படத்தில் இருவரும் தண்டனைக்காக மதுரை காந்தி மியுசியம் வருவார்கள். ஒரு போட்டிக்காக சத்திய சோதனை புக்கை மாளவிகா பெயரை பயன் படுத்தி அதிகம் விற்பார்கள். அந்த புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களில் ஒருவர் மாளவிகா உடன் டிண்ணர் சாப்பிட வாய்ப்பு. போட்டிக்காக புத்தகத்தை வாசிக்கும் ஒரு ரசிகர், சத்திய சோதனையால் கவரப்பட்டு, திருந்தி மக்களுக்கு சேவை செய்ய கிளம்பி விடுவார். இந்த காட்சியினால் இந்த புக்ககை படிக்க ஆசை பட்டேன். இந்த காட்சியினால் தூண்டப் பட்டு யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி இருப்பார்கலா? தெரிய‌வில்லை?! இது படத்தின் டைரக்டருக்கு கிடைத்த வெற்றியே!!

மொத்தம் 605 பக்கங்கள். வாசிக்க வாசிக்க மஹாத்மாவை பக்கத்தில் இருந்து பார்த்தார் போல் இருக்கின்ற‌து. எந்த‌ ஊட‌க‌மும் கொடுக்க‌ முடியாத‌ ஒரு நெருக்க‌த்தை புத்த‌க‌ம் ம‌ட்டுமே கொடுக்கின்ற‌து. ச‌த்திய‌ சோத‌னை‍‍ இந்த‌ வார்த்தையின் பொருள் ப‌டிப்ப‌தற்க்கு முன் ஒன்றாக‌வும், ப.பின் வேறாக‌வும் உண‌ர‌ முடிகின்ற‌து. தாம் எடுத்துக் கொண்ட‌ ச‌த்திய‌த்திற்கு எத்த‌க‌ய‌ சோத‌னைக‌ள் வ‌ந்த‌ன‌, அதை எந்த‌ எந்த‌ நேர‌த்தில் எப்படி காப்பாற‌ப்ப‌ட்ட‌து என்ப‌த‌ன் அவ‌தனிப்பே இந்த‌ புத்த‌க‌ம்.இதில் அவரே நம்முடன் பேசுவது போல் புத்தகம் துடங்குகின்றது. நம் வீட்டு தாத்தா அவர் வாழ்ந்த வாழ்கையை அவரே கதை கதையாய் நம்மிடம் சொல்வது போல் காந்தி நம்மிடம் சொல்கின்றார்.

அவ‌ருக்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் கொண்டு இது விவ‌ரிக்க‌ப் ப‌டுகின்ற‌து. சாதார‌ன பைய்யனாய் எப்ப‌டி ஒருவ‌ன் வ‌ள‌ர்கின்றான், என்ன என்ன‌ கார‌ண‌ங்க‌ள் ஒருவ‌னின் வாழ்கையில் குறுக்கிடுகின்ற‌ன‌, எப்ப‌டி அவ‌ன் அதை ப‌ய‌ன் ப‌டுத்திக்கொள்கின்றான் என‌ புத்த‌க‌ம் விரிகின்ற‌ ப‌க்க‌ங்கள் ஒவ்வொன்ரும் மிக‌ எதார்த‌மான‌வை.

ந‌ம‌து அன்றாட‌ வாழ்வில் ம‌ஹாத்மா, ப‌ல‌ வ‌ழிக‌ளில் ந‌ம்மை குறுக்கிடுகின்றார். க‌ர‌ண்சி நோட்டில், காந்தி க‌ண‌க்கில், திரைப்ப‌ட‌ நீதி ம‌ன்ற‌‍, போலீஸ் ஸ்டேஷ‌ன் காட்சிக‌ளில், வ‌ழுக்கை த‌லையுட‌ன், வ‌ட்ட‌ க‌ண்ணாடி அனிந்த‌ தாத்தா உருவம், நாம் க‌ண் மூடி யோசித்தாலும் ந‌ம்மால் காண முடியும்.

எப்ப‌டி இவ‌ர் ம‌ட்டும் இந்த‌ இட‌த்திற்கு வ‌ர‌ முடிந்த‌து, 40 கோடி ம‌க்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் ஒரு த‌லைவ‌ன் எப்ப‌டி உருவானான். எல்லா கால‌த்திற்குமான‌ ஒரு பாட‌ம் தான் இந்த‌ சத்திய சோதனை.

அவ‌ர், தேச‌ப் பிதாவாக‌ ம‌ட்டுமே ந‌ம‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து ஒரு பிழையே. பால்ய‌த்தில் அவ‌ர் கொண்ட‌ லீலைக‌ள், பாரிஸ்ட‌ர் ப‌ட்ட‌ப் ப‌டிப்பு வாழ்கை, இங்கிலாந்து வாழ்கை, அம்மாவிற்கு செய்து கொடுத்த‌ ச‌த்திய‌த்தின் ப‌க்க‌ விளைவுக‌ள், தென் ஆப்ரிக்கா ப‌ய‌ண‌ம், அங்கு அவ‌ர் செய்த‌ வ‌க்கில் தொழில், க‌ப்ப‌ல் ப‌ய‌ண‌க் குறிப்புக‌ள், மூண்றாம் வ‌குப்பு இர‌யில் பயண‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள், சைவ‌ உண‌வு போறாட்ட‌ம், ஆட்டுப் பால் ப‌ழ‌க்க‌ம், எப்ப‌டி பிர‌ச்ச‌னைக‌ளை அனுகுவ‌து, எப்ப‌டி த‌லைவ‌னுக்கான‌ குணங்க‌ளை பெருவ‌து, என எல்லா ப‌க்க‌ங்க‌ளிலும் ஒரு M.B.A மாண‌வ‌னுக்கு தேவையான‌ பாட‌ங்க‌ளும்,அனுப‌வ‌ங்க‌ளும் மிக‌ப் பெரிய‌ வ‌ர‌ம்.

இந்த‌ புத்த‌க‌த்தை ச‌ரியாக‌ marketing செய்ய‌ த‌வ‌றி விட்டார்க‌ள் ந‌ம‌து பெருசுக‌ள். எத்த‌னை க‌ல்லூரி, ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள் இந்த‌ புத்த‌க‌தை முழுவ‌துமாய் ப‌டித்து இருக்கின்றார்கள்?? ஒரு ஆசிரிய‌ர் ப‌டித்தால், அவ‌ரால் ஒரு நூறு பேரை ப‌டிக்க‌‌ வைக்க‌ முடியும். இங்கு பிர‌ச்ச‌னையெ ஆசிரியரை ப‌டிக்க‌ வைப்ப‌து தான்...

இந்த‌ புத்த‌க‌ம், எந்த‌ ஒரு விருவிருப்பான‌ துப்ப‌ரியும் க‌தைக்கும் ச‌லைத்த‌து அல்ல.

நேர‌ம் இல்லை என்று ப‌ந்தா ப‌ன்னும் ப‌ல‌ப் பேருக்கு இந்த‌ புத்த‌க‌ம் ஒரு ஆயுலுக்கு தேவையான‌ நேர‌த்தை காலத்துகும் வாங்கிக் கொடுக்கும்.

ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன‌ பாடுவ‌து ம‌ட்டும் தேச‌ப் பற்று ஆகிவிடாது. ம‌க்க‌ளுக்காக‌ பாடுப‌ட்ட‌ ஒரு த‌லைவ‌னை, முத‌ல்வ‌னை,ஒரு அசாதாரண மனிதரை ப‌டித்து தெரிந்து வைத்துக்கொண்டு, ம‌ற்ற‌வ‌ர்களை ப‌டிக்க‌த் தூண்டுவ‌தும் தேச‌ப் ப‌க்தியே.

நொப‌ல் விஞ்சானி ஐன்ஸ்டின் சொன்னாராம்," 50 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு இப்ப‌டி ஒரு ம‌னித‌ர் ந‌ம்மிட‌யே வாழ்ந்தார் என்றால், இந்த‌ உல‌க‌ம் ந‌ம்பாது" என்று. உண்மை தான், என்னால் உண‌ர‌ முடிகின்ற‌து.

பார‌த் மாத‌க்கு ஜெய்....ம‌ஹாத்மா காந்திக்கு ஜெய்!!

No comments:

Post a Comment