Wednesday, March 10, 2010

கொக்கு பற பற! மைனா பற பற!!

எத்தனை முறை படித்திருப்போம்? எத்தனை முறை வாய் வார்த்தையை சொல்லி இருப்போம்? ஒரு முறையேனும் பறந்து இருப்போமா? ஒற்றை வார்த்தையில் பறக்க வேண்டுமா வாருங்கள் வேடந்தாங்கல்.

போன வாரம், பறவையோடு பறவையாய் ஒரு முழு நாள் மொத்தமும் பறந்து திரிந்து வந்தேன். பாட புத்தகத்தில் எல்லாம் சென்னை இல் இருபதாகவே சொல்லி வருகின்றார்கள். மதுராந்தகதுகும் செங்கல்பட்டுக்கும் நடுவில் உள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஏரி தான் வேடந்தாங்கல். இனிப்பு என்பதர்ற்கு அர்த்தத்தை dictionary இல் தேடும் பொழுது, திருப்தி லட்டு கிடைப்பதை போல வேடந்தாங்கல் எனக்கும் அறிமுகம் ஆனது. Cousin Bro தான் இந்த ஊர் சுத்துற விஷயத்துக்கு partner.

நாம் ஏன் பறவைகளை விட்டு பிரிந்து இருக்கின்றோம்? எப்பொழுது பறவைகளை விட்டு பிரிந்தோம்? நமது பக்கத்து விட்டு மனிதர்களை பங்காளியாய் நினைக்கின்ற உறவை, பறவைகளிடமும், விலான்குகளிடமும் நாம் உணர்வது இல்லையே ஏன்? காகம், புற, மைனா என நாம் தெரிந்து வைத்து இருக்கும் பறவைகள் மிக சொற்பமே.

வேடந்தாங்கலில் பறவைகள் வருஷ வருஷம் அட்ரஸ் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.. எத்தனை எத்தனை பறவைகள்!! நான் பார்த்த பொழுது கிட்ட தட்ட 50 ஆயிரம் பறவைகள் இருந்து இருக்கும். சைபிரிய, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வட துருவம் என கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த பறவைகளை பார்த்தேன். ஒரு மரத்தில் ஒரு இன பறவைகள் என கூடம் கூடமாக military dicipline வாழ்க்கை வாழ்கின்றன.

ஜோடி பறவைகளாய் தங்கள் இனத்தை பெருக்கி கொள்வதற்காவே வேடந்தாங்கல் வருகின்றன. Vedanthaaingal பற்றி நமக்கும் புரியாத ஏதோ ஒரு விஷேசத்தை அந்த பறவைகள் மட்டும் தேரிந்து வைத்து இருகின்றன. எனக்கு புரியவே இல்ல, எப்படி இந்த இடத்தை பறவைகள் கண்டுபிடித்தன என்று? எப்படி தான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும் என்று அலைகின்றானோ?

தாய் பறவை அங்கும் இங்கும் பறந்து, சுள்ளி பொறுக்கி சொந்தமாய் கூடு காட்டுகின்றது. ஆண் பறவை இரை தேடி 100km வரை பறந்து திரிகின்றது. Watch tower ஒன்று வைத்து இருக்கின்றார்கள். Telescope ஒன்றின் மூலம் தூரத்தில் இருக்கும் பறவை கூடு, கூட்டில் இருக்கும் பறவை, பறவையின் முட்டை, குஞ்சு பொரிந்த குட்டி சேய் பறவை என, மிக பக்கத்தில் காட்டுகிறார்கள். அந்த பறவை குட்டுகுள் நானும் ஒரு பறவை குஞ்சாய் உணர்ந்தேன்.

அவை பறக்கும் அழகு, கூடு கட்டும் அழகு, முட்டைகளுக்கு வெயில் படாமல் இருக்க இரண்டு இறக்கை களையும் விரித்து பகிரதன் போல மௌனமாய் நின்று அடை காக்கும் அழகு, run way இல் இறங்கும் விமானம் போல மாலை கூடு திரும்பும் பறவைகள், அங்கிங் என காணும் காட்சி மொத்தமும் பறக்கும் ஓவியங்களே!!! Jan to April நான்கு மாதங்களே வந்து, குட்டி ஈன்று, குட்டி பறவைகளுக்கு வழி காட்டி, மீண்டும் தன் வசிப்பிடதுக்கே திரும்புகின்றன. குட்டி பறவைகள் தன் பருவ காலத்தில் வழி தப்பாமல் மீண்டும் தான் பிறந்த எட்டத்துகே வருகின்றன. இரவு படுத்த பின்னும் பறவைகள் கண்ணுக்குள் பறந்து கொண்டே இருந்தன. அவதார் படத்தில் ஹீரோ பறவை மேல் உட்கார்ந்து பறப்பது போலவே இருந்தது.

எனது அண்ணாவின் வர்ப்புருதலால் ஒரு வெளிநாட்டினரிடம் பேச்சு கொடுத்தேன்...

" ஹலோ, Weclome டு இந்திய. எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி. எந்த தேசத்தை சார்ந்தவர் நீங்கள்?"
"hey nice to meet you, we are from England"
" oh nice, hope this is your fist visit to India and Vedathaaingal? how is your trip?"
"NO! NO! this is my second visit to Vedanthaaingal and India"

வெட்கத்தால் என் தலையை மண்ணுக்கும் புதைத்துக்கொண்டு இருப்பேன் நான் மட்டும் நெருப்பு கோழியாய் இருந்திருந்தால்... ஏன் என்றால் என் ஊர் செய்யாரில் இருந்து வேடந்த்தாங்கள் 40km தூரம் கூட இருக்காது.. இத்தனை வருஷத்தில் முதல் தடவையாய் இப்பொழுது தான் வருகின்றேன்.

கோயில் குளம் என்று சலிக்காமல் சுற்றும் நாம், ஒரு முறையேனும் நம் குழதைகளோடு இங்கு வந்து பார்க்க வைக்க வேண்டாமா ? குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுத்தால் மட்டும் போதுமா, பறக்க சொல்லி கொடுக்க வேண்டாமா?

1 comment:

  1. இத படிக்கும் போது 4th standard ஸ்கூல் டூர் தான் மெமரில வருது. வேடந்தாங்கல் போக plan பண்ணோம் ...ஆனா லேட் ஆனதால last min cancel பண்ணிட்டோம். அப்போ மிஸ் பண்ணது ...இப்ப வரை miss தான். அடுத்த இந்திய tripல எப்படியாவது வேடந்தாங்கல் போக போறேன்!!! வெரி nice blog da . கீப் இட் up !!!

    ReplyDelete